Lyrics
இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)
இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்)
- சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்
வானாதி வானங்களும் கொள்ளாதவர்-2
எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்
2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்
பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்
மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்
மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்