Lyrics
நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை
1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம்
கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே
2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்
3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்