சிலுவை நாதர் இயேசுவின் | Siluvai Naadhar Yesuvin

Category: Songs

Duration: 6m

LYRICS: சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்! சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்.. என்னை நோக்கி பார்க்கின்றன, தம் காயங்களையும் பார்க்கின்றன. என்னை நோக்கி பார்க்கின்றன, தம் காயங்களையும் பார்க்கின்றன!! சிலுவை நாதர் இயேசுவின்! என் கையால் பாவங்கள் செய்திட்டால், தம் கையில் காயங்கள் பார்க்கின்றாரே! என் கையால் பாவங்கள் செய்திட்டால், தம் கையில் காயங்கள் பார்க்கின்றாரே... தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே; தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே. சிலுவை நாதர் இயேசுவின்! தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால், ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்! தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால், ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார். வீண்பெருமை என்னில் இடம்பெற்றால், முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்; வீண்பெருமை என்னில் இடம்பெற்றால், முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் இயேசுவின்! அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்; அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும். அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்; அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும். கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன், கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்; கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன், கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர் இயேசுவின்!! திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்! திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்!! தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்; தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார். சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்; சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள்; என்னை நோக்கி பார்க்கின்றன, தம் காயங்களையும் பார்க்கின்றன! என்னை நோக்கி பார்க்கின்றன, தம் காயங்களையும் பார்க்கின்றன!! சிலுவை நாதர் இயேசுவின்...

Lyrics

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

Loading